கன்னியாகுமரி ; கன்னியாகுமரி அருகே பேருந்துக்கு நின்றவரை மதுபோதையில் கொடுரமாக வாலிபர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் மேல்புறம் அருகில் பிளாக் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இவரது சகோதரர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக மேல்புறம் பிளாக் ஆபீஸ் சந்திப்பில் இருந்து மார்த்தாண்டம் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கும் போது, அந்த வழியாக மதுபோதையில் வந்த அஜி என்ற வாலிபர் நாகராஜனை தகாத வார்த்தையால் திட்டிவிட்டு கொடுரமாக தாக்கியுள்ளார்.
பக்கத்தில் உள்ளவர்கள் தடுத்தும் நிறுத்தாமல் துரத்தி சென்று தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த நாகராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மார்த்தாண்டம் காவல்துறை முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.