கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் மது பிரியர்களின் ஆபத்தான அட்டூழியம் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதோடு, இதுபோன்ற ஆபத்தை உணராத மது போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் மது தமிழ்நாட்டை விட குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் ஏராளமானவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அங்கு படை எடுத்து மது குடித்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர், கர்நாடக மாநில எல்லைக்குள் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் அங்கும் இங்கும் ஆக நடமாடுகிறார்.
மேலும் படிக்க: சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்… மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் கைது!!!!!
மேலும், சாலையில் பரபரப்பான வாகன போக்குவரத்து உள்ள நிலையில் சற்றும் அவற்றை பொருட்படுத்தாமல், போதையில் தள்ளாடிக் கொண்டு இங்கும் அங்கும் ஆக திரிவதால், வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதுடன், வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவதோடு வாகனத்தை இயக்குவதில் தடுமாறுகின்றனர்.
இவ்வாறு மது பிரியர் போதை தலைக்கேறிய நிலையில் மிகப்பெரிய சரக்கு லாரியையும் நிறுத்தி தடுமாறும் காட்சிகளை அந்தப் பகுதியில் சென்ற சிலர் வீடியோவாக பதிவிட்டு உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.