கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் விவேகானந்தன் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை சந்திப்பில் மனநலம் பாதித்த ராஜ என்பவரிடம் இரண்டு வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, அங்கு கீரிப்பாறை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் விவேகானந்தன் இந்த சம்பவத்தை கண்டு வாலிபர்களை தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் காவலரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த காவலர் விவேகானந்தனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நாகர்கோவிலை சேர்ந்த சொர்ணராஜ் மற்றும் ஜெரின்ராஜ் இருவரையும் பொதுமக்களும் தாக்கி உள்ளனர்.
இதனால் அவர்களும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்த புகாரின் பேரில் சொர்ணராஜ், ஜெரின் ராஜ் ஆகிய இருவர் மீதும் கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.