சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டு சினிமா தியேட்டர் ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர் படத்தை கண்டு களித்து வந்தனர். இந்த நிலையில் படத்தின் இடைவேளையின் போது, கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது, சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டதாகவும், அதற்கு ஊழியர்கள் மாற்றி கொடுத்து விடுகிறோம் என்று சொல்லியும், போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் இருந்த ஊழியரை தாக்கியுள்ளனர்.
இதனை கண்டு தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞர்களை வெளுத்து வாங்கிய காட்சி சினிமா படத்தில் வரும் காட்சிகளையே மிஞ்சியுள்ளது. இதனால், பொழுதுபோக்கிற்காக படத்தை காண வந்த பொதுமக்கள் நிம்மதியாக படம் பார்க்க முடியாமல் அச்சமடைந்தனர்.
மேலும் படிக்க: இரவாகியும் வீடு திரும்பாத பள்ளி மாணவர்கள்.. கிணற்றை எட்டிப் பார்த்த பெற்றோருக்கு ஷாக்…சோகத்தில் மூழ்கிய கிராமம்!!!
பின்னர், தகவல் அறிந்த தியேட்டர் மேலாளர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த போது, போதை இளைஞர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள் தாங்கள் செய்தது தவறுதான் என ஒப்புக் கொண்டு சென்றதாக கூறப்படும் நிலையில், மோதல் நடைபெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர்கள் சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெறுவதால் பொதுமக்களும் அச்சத்துக்குள் வாழ்ந்து வரும் சூழல் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.