தமிழகம்

புகாரளிக்க வந்த பெண்.. நெருங்கிப் பழகிய டிஎஸ்பி.. அடுத்த நடந்த ட்விஸ்ட்!

கர்நாடகாவில், புகாரளிக்க வந்த பெண்ணிடம் டிஎஸ்பி நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தின் மதுகிரி தாலுகாவில் காவல் துணை கண்காணிப்பாளராக ராமசந்திரப்பா (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தி டிஎஸ்பி ராமசந்திரப்பாவை, மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்.

பின்னர், அந்தப் பெண்ணை டிஎஸ்பி, தன்னுடைய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். தொடர்ந்து, அங்கு வைத்து அப்பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அப்போது அருகில் இருந்த ஒருவர், ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் துமகூரு மாவட்டம், பாவகடாவைச் சேர்ந்தவர் என்பதும், நிலப்பிரச்னை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததும் தெரிய வந்துள்ளது.

அப்போது தான் டிஎஸ்பி ராமசந்திரப்பா உடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால், காவல் நிலையத்தில் வைத்தே அவருடன் தனிமையில் டிஎஸ்பி இருந்தது தெரிய வந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக அப்பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!

இந்த நிலையில், மதுகிரி காவல் நிலையத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி ராமசந்திரப்பாவை, கர்நாடக போலீஸ் டிஜிபி அலோக் மோகன், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், மதுகிரி போலீசார், டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

3 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.