தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதல்வர் சுட்டிக் காட்டியதற்காகலாம் வம்புக்கு ஆளுநர் வரக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளம் மற்றும் கனிமம் சுங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, 143 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டு பாடியதை முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, சுட்டிக் காட்டியவர்களுடன் வம்புக்கு வரக்கூடாது.
இதையும் படிங்க: என்னை குளோஸ் பண்ண அதுதான் காரணம்.. கும்பிட்டுக் கூறிய நாசர்!
யார் விடுபட்டு பாடினாரோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, எதற்கு பார்த்தாலும் வெள்ளை அறிக்கை வேண்டும் என அதிமுக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அதனை நான் வெள்ளை பேப்பரில் எழுதி கருப்பு அறிக்கையாக தருகிறேன். படித்துக் கொள்ள சொல்லுங்கள்” எனக் கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.