கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் “குவாட்டர் பாட்டிலில் தூசி இருந்ததால், தமிழக அரசைக் கண்டித்து ஆவேசமாக போதை வாலிபர் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் குடிப்பதற்காக மது வாங்கியுள்ளனர். இதில் இரண்டு குவாட்டர் பாட்டில்களை அவர்கள் வாங்கிய நிலையில், அதில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் பெரிய அளவிலான துகள் ஒன்று கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர்கள், அந்த பாட்டிலை மதுபான கடையில் திரும்ப கொடுத்த போது, ஊழியர்கள் அதை பெற்றுக்கொண்டு, மாற்று மது பாட்டிலை கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை வாலிபர்களில் ஒருவர், அந்த குவாட்டர் பாட்டிலை துகளோடு வீடியோ எடுத்ததோடு ஆவேசமாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியதாவது :- “135-ரூ கொடுத்து ஒரு குவாட்டர் வாங்கினால், அதில் என்னென்னவே கிடக்கிறது. இதை குடித்து கொண்டு சாக வேண்டுமா..? என கேள்வி எழுப்பி, இதேப்போல் பாட்டில்கள் வந்தால் தீப்பற்றி எரியும் இரும்பிலி பார்,” என ஆவேசமாக பேசியுள்ளார்.
அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிலையில், அது தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.