Categories: தமிழகம்

பள்ளி வளாகத்தில் 2 சிறுமிகள் பலி… குடும்பத்திற்கு நிதியுதவி வழங்காதது ஏன்..? திமுக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

வாணியம்பாடி – சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில்‌ இருந்த பள்ளத்தில்‌ நீரில்‌ மூழ்கி மரணமடைந்த மாணவிகளின்‌ குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடியா திமுக அரசு பதவியேற்ற இந்த 29 மாத காலத்தில்‌, மக்களை பல்வேறு வகைகளில்‌ வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. அதேபோல்‌, திமுக-வினரின்‌ சட்ட விரோதச்‌ செயல்கள்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்த வண்ணம்‌ உள்ளது.
இவைகளையெல்லாம்‌ விடியா திமுக அரசு கண்டும்‌ காணாமல்‌ இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்‌.

அந்த வகையில்‌, திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட, நாட்றம்பள்ளி ஒன்றியம்‌, சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளி வளாகத்தில்‌ 10 அடி ஆழம்‌ கொண்ட பள்ளத்தில்‌ மழை நீர்‌ தேங்கி இருந்த நிலையில்‌ அப்பள்ளியில்‌ படித்து வந்த, கூலித்‌ தொழிலாளிகளின்‌ மகள்களான மோனிகா, ராஜலட்சுமி ஆகிய இருவரும்‌, கடந்த 27.9.2023 அன்று அந்தப்‌ பள்ளத்தில்‌ விழுந்து உயிரிழந்துள்ளதாகவும்‌;

அதேபோல்‌, ஆலங்காயம்‌ பேரூராட்சிப்‌ பகுதியில்‌ செயல்பட்டு வரும்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி வளாகத்தில்‌ 50 ஆண்டுகளுக்கும்‌ மேலான, 20-க்கும்‌ மேற்பட்ட பல லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பிலான உயிருள்ள தேக்கு மரங்கள்‌ தி.மு.க-வைச்‌ சேர்ந்த வார்டு உறுப்பினர்களின்‌ துணையோடு, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வெட்டிக்‌
கடத்தப்பட்டுள்ளதாகவும்‌ பொதுமக்கள்‌ புகார்‌ தெரிவிக்கின்றனர்‌.

சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளியில்‌, கூலித்‌ தொழிலாளிகளின்‌ மகள்கள்‌ மரணமடைந்துவிட்ட துயர சம்பவத்திற்கு, விடியா திமுக அரசு இரங்கல்‌ தெரிவிக்காமலும்‌, இதுசம்பந்தமாக எந்தவித மேல்‌ நடவடிக்கையும்‌ எடுக்காமலும்‌ கிடப்பில்‌ போட்டதற்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இந்நிலையில்‌, திருப்பத்தூர்‌ மாவட்டம்‌ வாணியம்பாடி தொகுதி, சிக்கனாங்குப்பத்தில்‌ உள்ள அரசு உயர்நிலைப்‌ பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில்‌ இருந்த பள்ளத்தில்‌ நீரில்‌ மூழ்கி மரணமடைந்த மாணவிகளின்‌ குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கவும்‌; பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணவ மாணவியர்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும்‌; ஆலங்காயம்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி வளாகத்தில்‌ இருந்த தேக்கு மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக்‌ கடத்தியவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்‌ விடியா திமுக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக திருப்பத்தூர்‌ மாவட்டத்தின்‌ சார்பில்‌, 16.10.2023 – திங்கட்‌ கிழமை காலை 10 மணியளவில்‌, ஆலங்காயம்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகம்‌ எதிரில்‌, மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடைபெறும்‌.

இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான திரு. வீரமணி அவர்கள்‌ தலைமையிலும்‌; ஆலங்காயம்‌ மேற்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளரும்‌, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார்‌, ஆலங்காயம்‌ கிழக்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார்‌ ஆகியோர்‌ முன்னிலையிலும்‌ நடைபெறும்‌.

இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டத்தில்‌, திருப்பத்தூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்களும்‌, கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு அமைப்புகளின்‌ முன்னாள்‌ நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ பெருந்திரளாகக்‌ கலந்துகொள்ள வேண்டும்‌.

விடியா திமுக அரசின்‌ நிர்வாக சீர்கேடுகளையும்‌, அலட்சியப்‌ போக்கையும்‌ கண்டித்து நடைபெற உள்ள இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டத்தில்‌, பொதுமக்கள்‌ பெருந்திரளான அளவில்‌ கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

14 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

30 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

37 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.