அதிமுகவைத் தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால் தான் தோற்றோம், பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்.
அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம். கூட்டணி குறித்து 6 மாதத்துக்கு முன்பு தெரிவிக்கப்படும்” என்றார்.
மேலும் பேசிய இபிஎஸ், “அதிமுகவைப் பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவைப் பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவைத் தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது” என்றார்.
முன்னதாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து களம் கண்டது. பின்னர், ஒரு சில காரணங்களால் கூட்டணி முறிந்தது. மேலும், பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்றே எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். குறிப்பாக, 2024 தேர்தல் களமும் இரு கட்சிகளும் தனித்தனியே சந்தித்தன.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு இந்த தடவ ஒர்க் அவுட் ஆகுமா…ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த முக்கிய அப்டேட்.!
மேலும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கினை வெட்டிக் கொண்டாடினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.