தமிழகம்

9 மாத காலதாமதம் ’இதற்காகவா’..? விவசாயிகளிடம் போட்டுடைத்த இபிஎஸ்!

வேறு வழியில்லாமல் அரிட்டாபட்டி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அரிட்டாபட்டி விவசாயிகள், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், அங்கு வந்த விவசாயிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது, “டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக, முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையடுத்து, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ‘நாங்கள் (மத்திய அரசு)டெண்டர் அறிவித்ததில் இருந்து இறுதி செய்யும் வரை மாநில அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதனால் இறுதி செய்கிறோம்’ என வெளிப்படுத்திவிட்டது.

எனவே, இந்த அரசு உண்மையிலேயே மக்கள் பாதிக்கப்படக்கூடிய திட்டம் எனக் கருதி இருந்தால், டெண்டர் விட்ட உடனே 9 மாத காலத்தில் உங்கள் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. அதேநேரம், இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் 9 மாத காலத்தை தாழ்த்தியுள்ளனர். ஆனால், நீங்கள் போராட்டத்தில் குதித்த காரணத்தினால், வேறு வழியில்லாமல் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். டங்ஸ்டன் ருரங்க ஏலத்திற்கான டெண்டர் விட்டது 2023, பிப்ரவரி.

அப்போதே தனித் தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இப்போதுதான் கொண்டு வந்தார்கள். 2023ஆம் ஆண்டு 6வது மாதம் சட்டமன்றம் கூடியது. பட்ஜெட் கூட்டம், மானியக் கோரிக்கை எல்லாம் நடைபெற்றது. அப்போது ஏன் கொண்டு வரவில்லை?

உண்மையிலேயே விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற திட்டம் என எண்ணியிருந்தால், 2023 ஆறாவது மாதம் சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கொண்டு வரவில்லை. இதையெல்லாம் விவசாயிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: வலதுசாரி அரசியல் நாடகம்.. சீமான் பாஜகவின் கொ.ப.செ? – திருமாவளவன் கேள்வி!

வேறு வழியில்லாமல் உங்களுடைய அறவழிப் போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது. அதன் வாயிலாகத்தான் மாநில, மத்திய அரசு இந்தச் சுரங்க ஏலத்தை ரத்து செய்திருக்கிறது. நானும் உங்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் கடுமையாகப் பேசினேன்.

என்னுடைய கேள்விக்கும் முறையான பதில் முதலமைச்சரிடம் இருந்து வராததால் நான் ஒரு வாக்கியத்தைச் சேர்த்தேன். அது, ‘என் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளைக் காப்பாற்றுவேன்’ என்று நான் சொன்னேன். இதற்குப் பிறகுதான் முதல்வர், என் பதவியே போனாலும் பரவாயில்லை, நான் விடமாட்டேன் எனச் சொன்னார்” என்று பேசினார்.

Hariharasudhan R

Recent Posts

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

2 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

38 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

50 minutes ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…

2 hours ago

This website uses cookies.