டெல்லி தேர்தலில் INDIA கூட்டணிக்கு சம்மட்டி அடி என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது கண்டனத்திற்கு உரியது.
டெல்லியில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது INDIA கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க முடிகிறது. INDIA கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. எல்லாருமே அதிகாரம் நிறைந்தவர்களாக இருக்கும் காரணத்தால், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாத காரணத்தால், மக்கள் மீது அக்கறையில்லாமல் இருக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம் என ஒரு மமதையில் இந்தியா கூட்டணி இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. இந்தத் தேர்தல் மூலம், காங்கிரஸ் கட்சி வாங்கிய ஓட்டுகளைப் பார்க்கையில், மிகமிக மோசமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. இங்கிருப்பவர்கள் தான் ‘INDIA கூட்டணி, INDIA கூட்டணி’ என தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், மற்ற மாநிலத்தில் இருப்பவர்கள் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தான் அது பொருந்தும் எனச் சொல்லிவிட்டனர். மேற்கு வங்க முதலமைச்சராக இருக்கட்டும், INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் நாடாளுமன்றத்திற்குத்தான் இது பொருந்தும், சட்டமன்றத்திற்கு பொருந்தாது எனச் சொல்லிவிட்டனர்.
அப்படி என்றால், அந்த INDIA கூட்டணி எப்படி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற முடியும்? அந்த வாய்ப்பு INDIA கூட்டணிக்கு கிடையாது என நம்புகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் போலி வெற்றியை திமுக பெற்றுள்ளது. வாக்காளர்கள் ஓட்டுக்களை திமுகவினரே போட்டுவிட்டனர்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் ஓட்டைகூட அவர்களே போட்டு விட்டார்கள். ஓட்டு போட போகையில், கடைசியில் பார்த்தால் எங்களுடைய முக்கியப் பொறுப்பாளர் ஓட்டையே திமுகவினர் பதிவு செய்திருக்கின்றனர். கள்ள ஓட்டின் மூலம் அதிகமான வாக்குகளைப் பெற்று, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மமதையில் இருக்கிறார்கள்.
2026இல் அதே சட்டமன்றத் தொகுதியில் என்ன நிலைமை ஏற்படும் என்பதை அந்த காலக்கட்டத்தில் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் நேரத்தில் வலிமையான கூட்டணி அமையும். கூட்டணி அமைத்தால், நிச்சயமாக உங்களையெல்லாம் அழைத்து தெரிவிப்போம். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: கொஞ்சம் ஓவரத்தான் போயிட்டாரு போல.. சீமானுக்கு அண்ணாமலை கேள்வி!
எங்களுக்கு எதிரி என்பது திமுகதான். அந்த அடிப்படையில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். வாக்குகளை ஒன்றாகச் சேர்க்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துவதற்காக அமைக்கப்படுவது. தேர்தல் முடிந்த பிறகு அவரவர் கொள்கைப்படிதான் கட்சி நடத்துவோம்” எனக் கூறினார்.
அப்போது, மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தமிழகத்திற்கு அல்வா கொடுத்துள்ளது என முதலமைச்சர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கே அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் அல்வா சாப்பிட்டதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். 525 அறிவிப்புகளை வெளியிட்டீர்கள் என்ன ஆயிற்று? சாதாரண அல்வா, பெரிய அல்வா கிண்டி கொடுத்துவிட்டு போய்விட்டார்” என இபிஎஸ் பதிலளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.