தமிழகம்

தினந்தோறும் கொலை பட்டியல்.. சட்டப்பேரவைக்கு வெளியே வெளுத்துவாங்கிய இபிஎஸ்!

திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 4 கொலைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதன் பின்பு, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேச முயற்சித்தோம். ஆனால், சபாநாயகர் அப்பாவு என் கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மதுரை அருகே காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றை வழிமறித்து ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்துள்ளார். கிட்டத்தட்ட சினிமா பாணியில் நடந்த கொடூரம் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் திமுக நிர்வாகி குமார் கடத்திச் செல்லப்பட்டு கொலை என்று ஒவ்வொரு நாளும் கொலைப் பட்டியல் வெளியாகி வருகிறது.

திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு போலீசாரைக் கண்டால் அச்சம் இல்லை. காவல்துறை செயலற்று உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஜாகீர் உசேன், தனது உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்தபோது, காவல்துறை அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்போது, முதலமைச்சர் அதனை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்.

இதையும் படிங்க: மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உங்களுடைய ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா, அப்படி நடக்கவில்லையா என்கிறார். அதெல்லாம் நடந்து முடிந்த சம்பவங்கள். கொலைகளை எண்ணிக்கை அடிப்படையிலா ஒப்பிட வேண்டும்? மக்களின் பாதுகாப்பில் விளையாடக்கூடாது. குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வதே அரசின் கடமை.

தங்கம், வெள்ளி விலை நிலவரத்தைப் போல் கொலை நிலவரம் வந்துவிடக் கூடாது. சட்டப்பேரவையில் இருந்து நாங்கள் பயந்துகொண்டு வெளிநடப்பு செய்யவில்லை. எங்களைப் பேசுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.