ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் சடலமாக மீட்பு : மனு கொடுக்க வந்த போது சோகம்!!
கோவையில் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற 83 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர் இன்று காலை அவரது மகள் மற்றும் பேத்தியுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
அப்போது பாலசுப்பிரமணியம் முதல் தளத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு மாடிப்படி ஏறி சென்றார். முதல் தளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாலசுப்பிரமணியம் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து முதியவரை பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து உடன் வந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் மற்றும் பேத்தி கதறி அழுதனர்.
பின்னர் முதியவரின் உடலை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனு அளிக்க வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.