Categories: தமிழகம்

வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய வளர்ப்பு மகள்: தந்தை வெட்டிப் படுகொலை…மதுரையில் அதிர்ச்சி!!

மதுரை: வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை தல்லாகுளம் கமலா 2வது தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி தனது வளர்ப்பு மகளான நிவேதா என்பவருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,சில தினங்களுக்கு முன் வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டது. இதனால் நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த முதியவர் கிருஷ்ணாராம் மர்ம நபர்களால் இன்று காலை படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த வீட்டிற்கு தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ப்பு மகளே இவரை கொலை செய்துள்ளாரா அல்லது வேறு யாரேனும் நபர்கள் கொலை செய்துள்ளனரா என காவல்துறை விசாரணையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.