#LoksabhaElection.. தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல்.. கோவையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..!!!
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சூலூர் சட்டப்பேரவை தொகுதி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தேவையான மருந்து மருத்துவ பொருட்களை தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 332 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது இந்த வாதசாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களை தயார் செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மும்முரமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்களின் பெயர் தாங்கிய மற்றும் அவர்களது சின்னங்கள் தாங்கிய பட்டியல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், எழுத பொருள் மற்றும் உபகரணங்கள் ஒரு பையில் வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணிகளில் வட்டாட்சியர் உதவி வட்டாட்சியர் மற்றும் , வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளடங்கிய 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
வியாழக்கிழமை காலை வாக்கு சாவடிகளுக்கு பாக்கு பெட்டி உள்ளிட்ட பொருள்களை கொண்டும் செல்ல பணி துவங்கப்படும் என சூலூர் வருவாய் வட்டாட்சியர் தனசேகர் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.