ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது, “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. திமுக 5 ஆண்டுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஏறக்குறைய 80 சதவீத வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
குடிநீர் வழங்கும் பணி, கழிவுநீர் அகற்றும் பணி, தடைபடாத மின்விநியோகம் ஆகியவை சிறப்பாக நடக்கின்றன. எனவே மக்கள் எங்களுக்கு தான் வாக்காளிப்பார்கள். நாங்கள் கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எதிர்க்கும் அதிமுக சஞ்சலத்தில் இருக்கிறார்கள்.
அவர்களால், அவர்களது அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. சஞ்சலத்தில் இருக்கிற, தன்னம்பிக்கை இல்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் மகத்தான வெற்றி பெறும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ள நிலையில், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இல்ல முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகமாக்கியுள்ள வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து,.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வசிக்கும் கச்சேரி வீதி, மண்டபம் வீதி, மனப்பாலம், மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை சாலை மேட்டூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.