தலைநகரில் சிக்கிய ஹவாலா பணம்… தேர்தல் விதி அமலான முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது!!
சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைப்பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று இரவு பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் அமைக்கட்பட்ட தனிப்படை போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது, ஆவணங்கள் இன்றி ரூ.1.42 கோடி பணத்தை வைத்திருந்த யாசர் அராபத், அதனை வாங்க வந்த குணா ஜெயின், மற்றொரு நபரையும் மடக்கி பிடித்தனர். இப்பொழுது, இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் யானை கவுனி போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை யானைக்கவுனி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைபோல், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.