போர்மேன் பேச்சை நம்பி பணி செய்த ஊழியர்: தூக்கி அடித்த மின்சாரம்: அலறித் துடித்த உறவினர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை  துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணி நடந்து வந்தது.  இதில் புதிய மின்மாற்றி பொருத்தும் பணியில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் செந்தில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த  போர்மேன் சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக கூறி செந்திலை பணி செய்ய வைத்ததாகவும், இதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், உயிரிழந்த செந்தில் குடும்பத்தார்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும், உரிய நிவாரண நிதி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர். 

மேலும், போர்மேன் சுப்பிரமணியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.

Sudha

Recent Posts

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

29 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

41 minutes ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…

2 hours ago

ஒரு பிச்சைக்காரனால அரசாங்கமே ரிஸ்க்ல இருக்கு- தனுஷின் “குபேரா” படத்தின் கதை இதுதானா?

வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…

3 hours ago

This website uses cookies.