கோவை குற்றாலம் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த சிறுவாணி அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காளிதாஸ் (59). அப்பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை காளிதாஸ் சாடிவயல் சோதனைசாவடியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சர்க்கார் போர்த்தி பேருந்து நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை காளிதாஸை வழிமறித்து தாக்கியது.
இதில் அலறிய காளிதாஸின் சத்தம்கேட்டு சென்ற பொதுமக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவரை மீட்டு காருண்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற காருண்யா நகர் போலீசார் காளிதாஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரதே பிரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.