ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் குடல் புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட பாலப்படுகை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டனர்,
இதையடுத்து தாளவாடி வனச்சரகர் சதீஷ்க்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானை குடல் புழு நோயால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக கால்நடை மருத்துவர் சதாசிவம் தெரிவித்தார்.
வனப் பகுதிக்குள் சென்ற யானையை தனிக்குழு அமைத்து யானையின் நிலை குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.