ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் குடல் புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட பாலப்படுகை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டனர்,
இதையடுத்து தாளவாடி வனச்சரகர் சதீஷ்க்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானை குடல் புழு நோயால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக கால்நடை மருத்துவர் சதாசிவம் தெரிவித்தார்.
வனப் பகுதிக்குள் சென்ற யானையை தனிக்குழு அமைத்து யானையின் நிலை குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.