ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் குடல் புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட பாலப்படுகை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டனர்,
இதையடுத்து தாளவாடி வனச்சரகர் சதீஷ்க்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானை குடல் புழு நோயால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக கால்நடை மருத்துவர் சதாசிவம் தெரிவித்தார்.
வனப் பகுதிக்குள் சென்ற யானையை தனிக்குழு அமைத்து யானையின் நிலை குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.