கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், மருதமலை, பேரூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது.
இதனால் ஏற்படும் மனித – விலங்கு மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.யானைகள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை, ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியில் 7 யானைகள் கொண்ட யானை கூட்டம் ராஜப்பன், வெங்கடாசலம் மற்றும் கருப்புசாமி ஆகியோர் விவசாய தோட்டத்திற்கு புகுந்து அங்கு 1 1/2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி மற்றும் தென்னை மரங்களை சூறையாடி சென்று உள்ளது. இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் இந்த விஷயத்தில் அரசு மற்றும் வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பதை அனைத்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் வலியுறுத்தி வருகின்றனர் .
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.