கோவை ; மேட்டுப்பாளையத்தில் ஒரிஜினல் மற்றும் போலி யானை தந்தங்களை விற்க முயன்ற வேட்டை தடுப்பு காவலர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்றம் கட்டுப்பாட்டு பிரிவு தெற்கு மண்டலம் மற்றும் தமிழக அரசின் கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்கு சட்டவிரோதமாக தந்தங்களை விற்க முயன்ற பிரதீஷ், சின்னப்பாண்டி, சுப்பிரமணி ஆகிய மூவரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து பிடிபட்ட மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், குணசேகரன், ராஜ்குமார், மனோஜ், நஞ்சுண்டன் என மேலும் நான்கு நபர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.
இந்த நால்வரும் அளித்த தகவலில் பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டைத்தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொடுத்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 2017 ஆம் ஆண்டு தாம்புக்கரை காப்புக்காடு பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது, வனப்பகுதியில் கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்து அதனை விற்க முயன்றதும் தெரிய வந்தது.
இதை அடுத்து வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் உட்பட நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரபகுதியை சேர்ந்தவர்கள் என மொத்தம் எட்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார் உட்பட மரத்தினால் போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு யானை தந்தமும் கைப்பற்றப்பட்டது. போலி யானை தந்தத்தை எதற்காக குற்றவாளிகள் வைத்திருந்தார்கள், என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.