கோவை: மருதமலையில் மூன்று மணி நேரம் முகாமிட்ட காட்டு யானை: பக்தர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி – வனப் பகுதிக்கு தீவிர முயற்சிக்குப் பிறகு விரட்டிய வனத்துறையினர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளது. முருகனின் ஏழாவது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் புகழ்பெற்ற திருக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் சாலையிலும் செல்ல முடியாமலும் ஒற்றை யானை மற்றும் கூட்டமாகவும் யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் படிக்கட்டு பாதையில் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை 3 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்று இருந்தது. இதனால், வாகனங்களில் செல்லும் பக்தர்களும், படிக்கட்டு பாதையில் செல்லும் பக்தர்களும் கீழே இருந்து மேலே செல்ல முடியாமலும், சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் பக்தர்களும் செல்ல முடியா படி சுமார் 3 மணி நேரம் அவதி அடைந்தனர்.
இது குறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்தது வனத் துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின்பு வனப் பகுதிக்குள் யானை விரட்டினர். பின்னர் நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினர் பக்தர்கள்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.