அமைச்சர் உதயநிதி பேசும் போது காலியான இருக்கைகள்.. பிசுபிசுத்துப் போன திமுக இளைஞரணி மாநாடு!!
சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு முன்னிட்டு சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்பின் முகப்பு பகுதியை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் ஒட்டுமொத்தமாக பல கோடி கோடி செலவு செய்து மிகப்பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு நேற்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலமையில் இரு சக்ர பேரணி நடைபெற்றதை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் திருவருத்தினை வானில் உருவங்களாக அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர். அப்போது தமிழக முதல் வருகையை முன்னிட்டு முகப்பு பகுதியில் மட்டும் கூட்டம் இருந்தது இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாட்டின் காலையில் தொடங்கிய மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள் திமுக முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆட்சி வந்தனர்.
அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு திறப்பு உரை மற்றும் தீர்மானம் குறித்து பேசினார் அப்போது ஒரு பகுதியில் மட்டுமே மக்கள் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.
அதன் பிறகு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் காலியாகவே இருந்தது சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில்ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
ஒரு சில தொண்டர்கள் வெளியே வலம் வந்து கொண்டிருந்தனர் மேலும் மாநாட்டிற்கு வந்திருந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு அமைக்கப்பட்டிருந்த குறைந்த அளவிலேயே வாகனங்கள் இருந்தன
காலையிலேயே மிகவும் உற்சாகத்துடன் தொடங்கிய மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் எதிர்பார்த்தபடி கூட்டம் இல்லாததால் மாநாட்டு பிசுபிசுபிசுத்தது
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
This website uses cookies.