தமிழகம்

தலைநகரை அலறவிட்ட அமலாக்கத்துறை.. கூண்டில் சிக்கும் பிரபல மருத்துவர் மற்றும் தொழிலதிபர்!

கோவை மாவட்டம் சூலூர் செலக்கரிச்சலைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50) என்பவரது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இவர் ஜவுளித் தொழில் மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மகன் வெங்கடேஷ், திமுக மாணவரணி ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.சில மாதங்களுக்கு முன், ராமச்சந்திரன் வங்கிகளில் பெற்ற கடன்களை ஒரே நேரத்தில் செலுத்தியதாகவும், அந்தப் பணத்தின் மூலம் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல், தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதல் அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாறில் மருத்துவர் இந்திரா என்பவரது வீட்டிலும், வேளச்சேரியில் கட்டுமானத் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகின்றன. இவர்கள் மீது பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான புகார்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டிலும் சோதனைகள் தொடர்கின்றன.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு மோசடி புகார்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொள்ளும் இத்தகைய தீவிர நடவடிக்கைகள், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.