Categories: தமிழகம்

பணி உத்தரவாதத்தை உறுதி செய்க… வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க கோவை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் திட்டம்!!

கோவை மாநகராட்சியில்‌ 12 ஆண்டுகளுக்கு மேலாக சுமார்‌ 4000 -க்கு மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்‌ , ஓட்டுனர்கள்‌ மற்றும்‌ கிளீனர்கள்‌ சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்‌.

தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் அமர்த்தவும், பணியில் தொடர வைப்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் வழங்கவில்லை.

மேலும் கலெக்டர் அலுவலகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்துள்ளனர்.

ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகவும், ஊழியர்களுக்கு பாதகமாக உள்ள இந்த ஒப்பந்தத்தை அனைத்தும் கோவை மாநகர மாமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தில் இதை நிபந்தனயைக சேர்த்தி தான் இந்த பணிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது SIGMA INFRA என்ற கார்ப்ரேட் நிறுவனம் பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஒப்பந்தத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 12 வருடமாக பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நீக்கிவிட்டு வடமாநில பணியாளர்களை கொண்டு இந்த பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒப்பந்த பணியாளர்கள் சங்கங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

இது குறித்து அவர்கள் வைத்துள்ள கோரிக்கையின் முழு விபரம்

  1. ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை உத்தரவாதம்‌ வழங்க வேண்டும்‌
    வேறு மாநில பணியாளர்களை பணி அமர்த்தி வேலை செய்ய கூடாது
    என ஒப்பந்த விதியின்‌ &ழ்‌ கொண்டு வர வேண்டும்‌.
  2. ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஏதேனும்‌ ஒரு நாள்‌
    ஊதுயத்துடன்‌ கூடிய வரவிடுப்பு வழங்க உறுது செய்ய வேண்டும்‌.
  3. ஒப்பந்த பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சி தலைவர்‌ அவர்கள்‌
    அறிவித்த குறைத்த பட்ச ஊதியம்‌ ரூ. 721/- (Minimum Wages Act)வழங்க
    உத்தரவிடவேண்டும்‌.
  4. அனைத்து ஒப்பந்த பணியாளர்களின்‌ ESI & PF சரி பார்த்து கோவை
    மாநகராட்சி கட்டியுள்ளதை உறுதி செய்ய வேண்டும்‌.
  5. ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை Soap, Mask, gloves மற்றும்‌ விபத்து ஏற்படாதவாறு மிளிரும்‌ வண்ண சீருடை
    ஓப்பந்ததார செலவிலேயே வழங்க வேண்டும்‌.
  6. ஒப்பந்த பணியாளர்கள்‌ அந்த அந்த மண்டலத்தில்‌ பணிபுரியம்‌ ஒப்பந்த
    பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்துவதற்காக பழி வாங்கும்‌
    எண்ணத்தில்‌ வேறு மண்டலத்திற்கு மாறுதல்‌ செய்யக்கூடாது. முடியாத
    பட்சத்தில்‌ தேவை ஏற்பட்டால்‌ 5km சுற்றளவுக்குள்‌ இடமாறுதல்‌
    செய்யலாம்‌ அவர்களின்‌ வாழ்வாதாரத்திற்கு எந்த பங்கமும்‌
    விளைவிக்க கூடாது என்று ஒப்பந்த விதிகளின்‌ கீழ் உறுதியளிக்க
    வேண்டும்‌.
  7. ஒப்பந்த பணியாளர்களை சட்ட விதிகளின்‌ படி 8 மணிநேரம்‌ வேலை
    வழங்க வேண்டும்‌. அதற்கு மேல்‌ வேலை செய்யும்‌ பட்சத்தில்‌ அதற்கு
    உண்டான ஊதியத்தை இரு மடங்காக வழங்க பட வேண்டும்‌.

அதோடு தற்போது 12 வருடமாக பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நீக்கிவிட்டு குறைந்த வடமாநில பணியாளர்களை கொண்டு இந்த பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒப்பந்த பணியாளர்கள் சங்கங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

ஒப்பந்த பணியாளர்கள்‌ கோவை மாநகராட்சியின்‌ வளர்ச்சிக்காக சுமார்‌ 12 ஆண்டுகள்‌ மிக சிறப்பாக பணியாற்றி வருகிறன்றனர். அவர்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை ஒப்பந்த வீதியின்‌ கீழ்‌ கொண்டு வர உறுதியளிக்க வேண்டும்‌. தவறும் பட்சத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

17 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

18 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

1 hour ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

2 hours ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

3 hours ago

இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…

3 hours ago

This website uses cookies.