தமிழகம்

2026 முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அமரப்போவது உறுதி : அண்ணாமலை உறுதி!

தமாகா தலைவர் மூப்பனாரின் நினைவு தினம் இன்று சென்னையில் அனுசரிக்கப்பட்டது. மூப்பனாரின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, தமிழக மண்ணில் நேர்மையான, மக்கள் நலன் காக்கும் அரசியலை உருவாக்கிட, மூப்பனார் அவர்களின் வழியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், மாற்றத்தின் முதல் படியாக அமைய வேண்டும் என்பதே மக்களின் ஆவல். டீக்கடைகள் முதல் தெருக்கள் வரை, சாமானிய மக்கள் மாற்றத்தைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டனர்.

அவர்களின் குரல் வலிமையடைகிறது. இந்த மாற்றத்திற்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் திரு. இபிஎஸ் அவர்கள் தலைமையில் பயணிக்கிறோம்.

இன்று இந்த மேடையில் அவர்கள் உரையாற்றி, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளார்கள்.2026இல், தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ் அவர்கள் அமர்ந்து, ஒரு புதிய புரட்சியைத் தொடங்குவார். இந்த மாற்றம் ஏழை மக்களுக்கு விடிவெள்ளியாக அமைய வேண்டும்.

மக்கள் நலனுக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் இந்த அரசு செயல்பட வேண்டும்.மேலிருந்து நம்மைப் பார்த்து ஆசி கூறும் மாண்புமிகு ஜி.கே.மூப்பனார் அவர்களின் கனவு, 2026 தேர்தலில் நனவாகும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.வாருங்கள், 2026இல் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியல் கொண்டு வருவோம்!

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.