ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், வரும் 27ம் தேதி தெரியவரும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது. வரும் 27 ம் தேதி தெரியவரும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யாரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் போகத்தான் வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா, கலைஞருக்கு பிறகு பல முனை போட்டியுள்ளது. தலைவர்களை காலம் உருவாக்கிய பிறகு இரு முனை போட்டி ஏற்படும். திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்தால், மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக திருந்த வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.
அதிமுக ஒபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்பு அத்தைக்கு மீசை முளைக்கடும் பிறகு பார்க்கலாம், என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.