ஈரோடு : வடக்கில் உள்ள மாற்று சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்று மக்கள் தீர்மானித்து விட்டதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் களைகட்டி வருகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, மாற்று கட்சியில் இருந்து திமுகவில் ஏராளமானோர் இணையும் நிகழ்ச்சி திமுக எம்பி கனிமொழி முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. ஆனால் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உருவாக்கி காட்ட வேண்டும் என்கிற முதல்வரின் அன்பு கட்டளை நிறைவேற்றி காட்ட வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏனென்றால் மக்கள் அதிமுக கட்சியில் தங்களுக்குள் உள்ள குழப்பத்திற்கும் தீர்வு இல்லையென்றால் வடக்கில் உள்ள மாற்று சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
தமிழர்களுக்கு எதிராக தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அத்தனை பேருக்கும் தோல்வியாக இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையும் என்று நம்பிக்கை உள்ளது, என தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.