தமிழகம்

தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகர் காலமானார்.. அதிர்ச்சியில் கட்சியினர்!

ஈரோடு கிழக்கு எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நலக் குறைவால் காலமானர்.

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று (டிச.14) காலமானார். உடல்நலப் பிரச்னையால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்: முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலை அடுத்து ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் கடந்த ஆண்டு காலமானார். இதனையடுத்து, இந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், மீண்டும் திடீர் உடல்நல கோளாறு காரணமாக, கடந்த நவம்பர் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அப்போது, நிமோனியா காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக அவ்வப்போது மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது..

இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இரண்டு முறை தலைவராக பொறுப்பு வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈவிகே சம்பத் – சுலோச்சனா தம்பதியின் மகனான இவர், பெரியாரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கதது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.