சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த காய்கறி சந்தை பழுதடைந்ததால் புதிதாக காய்கறி சந்தை கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்டிற்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும், உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி இன்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.