ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் இரண்டு மினி வேன்கள் பண்ணாரி சோதனை சாவடியில் பிடிபட்டது.
குட்கா பான் பராக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இதுவரை பல கோடி மதிப்பிலான புகைநிலை பொருட்களை கைப்பற்றி அழித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக கர்நாடக மாநில எல்லையான பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் நடத்திய வாகன சோதனையில், மைசூரிலிருந்து காய்கறி ஏற்றிவந்த மினி வேனில் தடைசெய்ய பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். சுமார் 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.