ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் இரண்டு மினி வேன்கள் பண்ணாரி சோதனை சாவடியில் பிடிபட்டது.
குட்கா பான் பராக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இதுவரை பல கோடி மதிப்பிலான புகைநிலை பொருட்களை கைப்பற்றி அழித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக கர்நாடக மாநில எல்லையான பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் நடத்திய வாகன சோதனையில், மைசூரிலிருந்து காய்கறி ஏற்றிவந்த மினி வேனில் தடைசெய்ய பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். சுமார் 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.