Categories: தமிழகம்

காருக்குள் பயிற்சி மருத்துவருக்கு பயிற்சி கொடுத்த இஎஸ்ஐ டாக்டர் ஷ்யாம்.. அனுமதியோடு நடந்த உல்லாசம் : ஏமாற்றப்பட்ட பெண்!

கோவையைச் சேர்ந்த பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தான் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினேன்.

அங்கு மருத்துவராக பணியாற்றிய ஷயாம் சுந்தர் என்பவர் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்பொழுது அவருக்கு திருமண ஆகவில்லை என்றும் அவரை காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார்.

மேலும் அவர் அவரது காரில் ஊட்டிக்கு பல்வேறு இடங்களில் அழைத்துச் சென்று உள்ளார். அவர்கள் இருவரும் காரில் நெருக்கமாக இருந்து உள்ளனர். கணவராக வரப்போகிறவர் என்பதால் உல்லாசம் அனுபவிக்க அவர் அனுமதித்து உள்ளார்.

பின்னர் அவர் கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பணி மாறுதல் ஆகி வந்து விட்டார். அந்த பெண் மருத்துவர் பயிற்சியை முடித்துக் கொண்டு கோவை திரும்பினார்.

கோவை வந்ததும் ஷயாம் சுந்தர் அடிக்கடி அவரை காரில் வெளியே அழைத்துச் செல்வார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி கோவையில் ஒரு ஹோட்டலில் கணவன் – மனைவி என்று பதிவேட்டில் பதிவு செய்து அறை எடுத்து அவரிடம் உல்லாசமாக இருந்தார்.

இதை தொடர்ந்து ஷயாம் சுந்தரிடம் எப்பொழுதும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றும் அவர் வீட்டிற்கு வந்து பெண் கேளுங்கள் என்றும் கூறி உள்ளார். அதன் பிறகு அந்த பெண் மருத்துவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

அதன் பிறகு தான் ஷயாம் சுந்தர்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி ஒரு ஆண் குழந்தை இருப்பதில் தெரிய வந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி சுங்கத்தில் உள்ள ஷியாம் சுந்தர் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளார்.

அங்கு இருந்த ஷயாம் சுந்தரின் தாய், அக்கா அவரது மாமா ஆகியோர் அவரைத் திட்டி அனுப்பிவிட்டனர். திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து அவரை ஏமாற்றி இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருத்துவர் ஷயாம் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.

அதன் பேரில் கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் ஷயாம் சுந்தர் மீது நம்பிக்கை மோசடி, பொது இடத்தில் ஆபாச செயல் புரிதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவினில் வழக்கு பதிவு செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

1 hour ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

1 hour ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.