கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 21 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்போர் ஆகியோர் விண்ணப்பிக்க முடியாது.
இதன்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலர், மீண்டும் மேல்முறையீடு செய்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அதிக வருமானம் போன்ற தகுதியில்லாத நபர்கள், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தகுதியுள்ள பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இதுவரை எனக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி வந்தனர். இதனிடையே, எனது கணவர் இறந்துவிட்டார்.
இதையும் படிங்க: சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!
ஆனால், தற்போது திடீரென மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டனர். ஆனால், காரணம் தெரியவில்லை. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். அதேநேரம், சென்னையில் இருந்தே சிலருக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ள கோட்டாட்சியர், மேல்முறையீடு செய்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்போம் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.