திருச்சி மாவட்டம் பனையகுறிச்சியை சேர்ந்த கொம்பன் என்கிற ஜெகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தவறாக வழி நடத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் அவர் மீது புகார் இருந்தது. அவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் கொம்பன் டீம், கொம்பன் பிரதர்ஸ் என்கிற பெயரில் சிலர் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கொம்பன் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அந்த வகையில் அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களில் சில போலீசாரை மிரட்டும் விதமாக உள்ளது. குறிப்பாக ரெட் அலர்ட் என்றும், சம்பவங்கள் தொடரும், காத்திருடா போலீஸ் எனவும் ஒரு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு வீடியோவில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தலைகள் சிதறும் என எழுதி மிரட்டல் விடுக்கும் வகையில் பாடல்களையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: எந்த ஆதரவு இல்லாமல் அதிமுகவுக்காக நான் மட்டுமே பிரச்சாரம் செய்தேன்.. 1% உயர்வு.. இது வெற்றிதான் : இபிஎஸ்!
எஸ் பி வருண்குமார் உள்ளிட்ட போலீசாரை மிரட்டும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.