திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷ் இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஸ்வாதி என்ற பெண்ணுடன் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நரேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி சென்றுள்ளார்.
அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது 2,350வது படியில் காலை வைக்கும் போது திடீரென மயங்கினார். இதனால் அதிர்ச்சியில் அலறிய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நரேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை திருப்பதி கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழும் காட்சிகள் பொதுமக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரவைழத்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.