Categories: தமிழகம்

உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை : லாரி ஓட்டுநராக பணிபுரிந்த முன்னாள் மாநகராட்சி ஊழியர் கைது!!

கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய முன்னாள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர், நீலிகோணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, கடந்த சில தினங்களாக திடீரென வந்த நபர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி, வீதி மீறல் உள்ளதாக அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றுள்ளார்.

மேலும், ஒவ்வொரு கடையிலும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்துக் கடை உரிமையாளர்கள் கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் யாரும் அபராதம் விதிக்கவில்லை என கூறிய, அவர் மறுமுறை வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில், மீண்டும் சவுரிபாளையம் தனியார் வணிக நிறுவனத்திற்கு வந்த சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளார்.

இதையடுத்து கடை உரிமையாளர் சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரி அங்கு சென்று சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சிவக்குமாரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் மாநகராட்சியில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.

கொரோனா காலத்தில் அபராதம் விதிக்க மாநகராட்சியில் கொடுக்கப்பட்ட ரசீதை வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த போலி ஐடி கார்டு, ரசீது புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், சிவக்குமார் மீது 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

11 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

13 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.