தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ICU)எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் தமிழக சுகாதாரத் துறையை மீட்டு எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னை செங்குன்றம் அருகே நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் போது ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு தூவப்பட்ட காமெடி அரங்கேறி இருக்கிறது.
மறுபுறம், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் படிந்த அறுவை சிகிச்சை உபகரணங்களை அவரது மகன் கழுவுகின்ற கொடுமை நடந்தேறி இருக்கிறது. எளிய மக்களின் உயிர் பாதுகாப்பில், அவர்களது சுகாதாரமான வாழ்வுக்கு வித்திட வேண்டிய அரசு மற்றும் சுகாதாரத் துறையின் சுனக்கத்தால் ஏற்பட்டிருக்கிற நிர்வாகத் தோல்வியின் ஆகச்சிறந்த உதாரணங்கள் இவை.
உடனடியாக இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ சுகாதாரத் துறையில் நிகழ்ந்து வரும் இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் தமிழக சுகாதாரத் துறையை மீட்டு, ஏழை – எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது இருக்கின்ற கடைசி நம்பிக்கையை காப்பாற்றிட வேண்டுமென வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.