திண்டுக்கல்லில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நேர் எதிரே சந்தித்த பொழுது எம்ஜிஆர் நம்பியார் போல சண்டையிட வேண்டாம் என தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.
திண்டுக்கல் மாநகரத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம் மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளரான நெல்லை முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் தெற்கு பகுதியிலான மேட்டுப்பட்டி, குள்ளனம்பட்டி, பாரதிபுரம் நாகல்நகர் அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் இரு வேட்பாளர்களும் நேர் எதிரில் செல்லும்பொழுது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க் கட்சியினருக்கு வாழ்த்துக்கள், நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம் என பேசியதை கேட்டு வேட்பாளர் உட்பட பிரச்சாரத்திற்கு வந்த அனைவரும் குழம்பினர். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டு கொள்ள வேண்டாம் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.