திமுகவை போல ஆட்சிக்கு வருகின்றபோது ஆடுவதும் ஆட்சி இல்லாத போது ஓடுவதுமாக இருக்கிற இயக்கமாக அதிமுக கிடையாது என மன்னார்குடியில் அதிமுக பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பந்தலடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது :- அதிமுகவுக்கு இருக்கின்ற வரலாற்றை போல உலகில் வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய வரலாறு இருக்க முடியாது. அண்ணா திமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதை எங்களால் உறுதி செய்ய முடியும். ஏனென்றால் உறுப்பினர்களை சேர்த்தவர்கள் நாங்கள். அதிமுகவில் உறுப்பினர்கள் தானாகவே வந்து சேர்கிறார்கள். அதிமுக நீடித்து நிலைத்து இருக்கிறது. எப்பொழுது எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வருவார். கல்யாணத்திற்கு சென்றாலும் காதணிவிழாவிற்கு சென்றாலும், இதே பேச்சாக தான் இருக்கிறது. அடுத்தது அதிமுக தான் ஆட்சி என திமுக ஆட்சிக்கு வந்த உடனே பொதுமக்கள் பேசிகின்றனர்.
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை தருகிறோம் என தேர்தல் வாக்குறுதிகளை திமுக கூறியது அதை திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பக்கத்து மாநிலங்களில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்து விட்டார்கள்.
அடிதட்டு மக்களை கை தூக்கி விட்ட தலைவி புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவை போல் தமிழகத்திற்கு திட்டத்தை கொடுத்தவர்கள் யார் இருக்கிறார்கள். பெண்களுக்கு ரோல் மாடல் என்றால் புரட்சித் தலைவி அம்மா. உலகத்தில் எந்த மூலையில் பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் முதல் குரலை கொடுக்கக் கூடிய தலைவி புரட்சித்தலைவி அம்மா. அதிமுக ஆண்ட பத்து ஆண்டுகளில் மொத்தமே ரூ 3 1/2 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றினோம்.
ஆனால் திமுகவோ ஆட்சிக்கு வந்த 32 மாதங்களிலே ரூ 3. 1/2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் திட்டங்களை மக்களுக்கு செய்து விட்டோம் என கூறுகிறார்கள். திமுகவை போல ஆட்சிக்கு வருகின்றபோது ஆடுவதும், ஆட்சி இல்லாத போது ஓடுவதுமாக இருக்கிற இயக்கமாக அதிமுக கிடையாது. எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான நிலையான இயக்கம் அதிமுக கழகம், என்று கூறினார் .
அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் . ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் , தமிழ் கண்ணன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் உள்ளிட்ட இளம்பெண் , இளம்பாசறை , தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட நகர , ஒன்றிய கழக நிர்வாகிகள் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.