திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசினை கண்டித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும், பள்ளி பயிலும் மாணவர்கள் கைகளிலும் எளிதாக போதைப்பொருட்கள் கிடைக்கும் வகையில், தற்போது தமிழகம் போதைப்பொருளால் சீரழிந்து வருகிறது எனவும் கூறினார்.
மேலும், போதைப் பொருளால் ஒன்றரை லட்சம் கோடி வரை திமுகவிற்கு லாபம் கிடைத்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதீக் முதலமைச்சர் குடும்பத்துடன் பழகி வந்துள்ளதாகவும், அனைவரிடமும் பழகிய ஒரு நபர் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கட்சி தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.