ஈரோடு இடைத்தேர்தலில் பண மழை அல்ல, பண சுனாமி என்றும், இதுவரை அரசியல் வரலாற்றில் காணாத காட்சிகளை பார்க்க முடிந்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 750 நபர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டார்.
அப்போது, ஈரோடு இடைத்தேர்தலில் பணம் மழையல்ல பண சுனாமி எனவும், இதுவரை அரசியல் வரலாற்றில் இப்படிபட்ட இடைத்தேர்தலை சந்தித்ததில்லை எனவும் பேசினார். ஈரோடு இடைத்தேர்தலில் பொதுமக்களை ஒரு பட்டியல் போட்டு அடைப்பது போல அடைத்து சாப்பாடு போட்டு திரைப்படம் காட்டி, அவர்கள் தேவையான பணங்களை அள்ளி வீசியும், பரிசு பொருட்களை அள்ளி கொடுத்தும் திமுகவினர் வாக்குகளை பெற்றதாகவும், இத்தனை பரிசு பொருட்களை திமுகவினர் அள்ளி கொடுத்தும், அதிமுக 43 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது எனவும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு, கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், ஆயக்குடி பேரூர் செயலாளர் சசிகுமார், பாலசமுத்திரம் சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.