பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் இப்போ ஹைலைட் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக கூறியுள்ளார்.
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நடைபெற்று வரும் மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது :- ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி, மீசை இல்லாத ரஜினி என்பது போல் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சிய இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது மாறிவிடுவார்கள்.
முதல்வருக்கு உழைப்பவர்களின் கஷ்டம் தெரியுமா..? நோகாம முதலமைச்சர் பதவி வாங்கி விட்டார். அவருக்கு தொழிலாளுடைய வழி எப்படி தெரியும்? சட்ட மசோதா ஏற்றிவிட்டு போராட்டம் அறிவித்த பிறகு எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாபஸ் வாங்கியுள்ளார். நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லிய முதல்வர் வாபஸ் பெற்று விட்டாதாக கூறி இன்று சிவப்பு சட்டை அணிந்து மே தினம் கூட்டத்திற்கு வருகிறார்.
தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாமல் கம்யூனிஸ்டுகள் திமுகவுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். எதற்கு? எல்லாம் பணத்திற்காகதான். தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் பெற்றவர்கள் அடுத்த முறை 50 கோடி ரூபாய் எதிர் பார்த்து தான். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட். மதுரைக்காரன், வீரமானவன், அமைச்சர் தியாகராஜனை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
ஸ்டாலின் அப்பா, உதயநிதி தாத்தா இன்பநிதியின் கொள்ளு தாத்தாவிற்கு மதுரையில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. வேறெதுவும் மதுரைக்கு செய்யவில்லை. எந்த திட்டங்களும் கொண்டுவரல. திமுக வெட்டக்கூடிய ரிப்பன் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களில் செயல்படுத்தப்பட்டதுதான்.
கோவைக்கு சிறப்பு நிதி ஒதுக்கியவர்கள். நிதி அமைச்சர் உள்ள நம்ம மதுரை தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை. நீங்கள் Without டிக்கெட் தான். அன்று டிடிஆர் ரயிலில் இருந்து இறக்கி விட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. திமுகவை வீட்டிற்கு அனுப்பும் பணியை தேர்தல் எப்போது வந்தாலும் நிச்சயமாக தொழிலாளர்கள் செய்வார்கள், என்றார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.