கோவையில் வரும் 2ந்தேதி அதிமுக சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியமைக்காகவும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவைகளை ஏற்படுத்தியமைக்காகவும், திமுக அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வரும் 2-ஆம் தேதி கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு தமிழக சட்டமன்ற எதிர்கட்சி பழனிசாமி தலைமையேற்க உள்ள நிலையில், போராட்டம் நடைபெற உள்ள கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே. செல்வராஜ், அமுல்கந்தசாமி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.