Categories: தமிழகம்

ஒரு வாரம் தான் டைம்… இல்லனா நடக்கறதே வேற : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி எச்சரிக்கை!!

கோவை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை ஒரு வாரத்தில் சரி செய்ய வில்லை எனில் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் மழைநீரால் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். கார் செல்ல இயலாத இடங்களில் அவர் இரு சக்கர வாகனங்களில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தபகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது, இது தாழ்வான பகுதி என்பதால் செங்குளத்தில் நீர் நிறையும் போது இது போன்ற பிரச்சினைகள் வரும் எனவும், இப்பகுதியில் சாக்கடைக்கு டெண்டர் விடப்பட்டது, அதையும ரத்து செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து கமிஷ்னர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை, காலையில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிவித்த அவர், இந்த பகுதியில் வயசான அம்மா, வீட்டிற்குள் புகுந்த தணணீரில் தவித்தார்கள். அவரை மீட்டு வேறு இடத்தில் தங்க வைத்துள்ளோம் எனவும், இந்த பகுதியில் மக்களுக்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை.

தயவு செய்து அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும், குறிச்சி குளம் பணிகள் ஒன்றரை வருடம் நடைபெறவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இப்போது மாநகராட்சியில் வரிகள் அதிகம் விதிக்கபட்டுள்ளது வருவாய் வருகின்றது என தெரிவித்த அவர், பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இது வரை திமுக அரசு எந்த வேலையும் பார்க்க வில்லை எனவும் குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கின்றனர் என தெரிவித்த அவர், இன்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன் எனவும் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுளளது, பாலப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றை துவங்க வேண்டும் என தெரிவித்த அவர், நான் அமைச்சராக இருந்த போது இருந்தால் என்னுடன் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள், இப்போது அதிகாரிகள் யாரும் இல்லை, நான் எம்.எல்.ஏ தான் என்றும் தெரிவித்தார்.

மக்கள் எங்கே திமுகவை பாராட்டுகின்றனர் என தெரியவில்லை,
யாருக்குமே இங்கு அவர்கள் நல்லது பண்ணவில்லை எனவும் தெரிவித்தார்.

சென்னையில் சாலைகள் சூப்பராக இருப்பதாக சொல்கின்றனர், மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது என தெரிவித்த அவர், இந்த அரசு எதையும் செய்யவில்லை எனவும் நன்றாக கூட மழை பெய்ய வில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த அரசு விளம்ப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும், தொலைக்காட்சியில நடிக்காமல் வேலை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

13 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

21 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

56 minutes ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

2 hours ago

This website uses cookies.