Categories: தமிழகம்

ஒரு வாரம் தான் டைம்… இல்லனா நடக்கறதே வேற : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி எச்சரிக்கை!!

கோவை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை ஒரு வாரத்தில் சரி செய்ய வில்லை எனில் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் மழைநீரால் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். கார் செல்ல இயலாத இடங்களில் அவர் இரு சக்கர வாகனங்களில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தபகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது, இது தாழ்வான பகுதி என்பதால் செங்குளத்தில் நீர் நிறையும் போது இது போன்ற பிரச்சினைகள் வரும் எனவும், இப்பகுதியில் சாக்கடைக்கு டெண்டர் விடப்பட்டது, அதையும ரத்து செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.

இந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து கமிஷ்னர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை, காலையில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிவித்த அவர், இந்த பகுதியில் வயசான அம்மா, வீட்டிற்குள் புகுந்த தணணீரில் தவித்தார்கள். அவரை மீட்டு வேறு இடத்தில் தங்க வைத்துள்ளோம் எனவும், இந்த பகுதியில் மக்களுக்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை.

தயவு செய்து அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும், குறிச்சி குளம் பணிகள் ஒன்றரை வருடம் நடைபெறவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இப்போது மாநகராட்சியில் வரிகள் அதிகம் விதிக்கபட்டுள்ளது வருவாய் வருகின்றது என தெரிவித்த அவர், பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இது வரை திமுக அரசு எந்த வேலையும் பார்க்க வில்லை எனவும் குற்றம்சாட்டினார். கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கின்றனர் என தெரிவித்த அவர், இன்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன் எனவும் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுளளது, பாலப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றை துவங்க வேண்டும் என தெரிவித்த அவர், நான் அமைச்சராக இருந்த போது இருந்தால் என்னுடன் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள், இப்போது அதிகாரிகள் யாரும் இல்லை, நான் எம்.எல்.ஏ தான் என்றும் தெரிவித்தார்.

மக்கள் எங்கே திமுகவை பாராட்டுகின்றனர் என தெரியவில்லை,
யாருக்குமே இங்கு அவர்கள் நல்லது பண்ணவில்லை எனவும் தெரிவித்தார்.

சென்னையில் சாலைகள் சூப்பராக இருப்பதாக சொல்கின்றனர், மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது என தெரிவித்த அவர், இந்த அரசு எதையும் செய்யவில்லை எனவும் நன்றாக கூட மழை பெய்ய வில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த அரசு விளம்ப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும், தொலைக்காட்சியில நடிக்காமல் வேலை செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

49 minutes ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

2 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

2 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

3 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

3 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

4 hours ago

This website uses cookies.