Categories: தமிழகம்

இலங்கைக்கு செல்லும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை.. தமிழக அரசுக்கு சொன்ன சூப்பர் யோசனை!!

இலங்கைக்கு செல்லும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை.. தமிழக அரசுக்கு சொன்ன சூப்பர் யோசனை!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்க்கும் காளை கலந்து கொண்டு வெற்றி பெற்றது.

அதை பார்வையிட்ட பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு மதுரையிலே முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

திருச்சியிலே இன்று முதல் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனது பொதுவான வேண்டுகோள் அரசு ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், துணை நிற்க வேண்டும், ஜல்லிக்கட்டு விழா என்பது 20கல்யாணத்தை ஒரே நேரத்தில் நடத்துவது போல மிகவும் கஷ்டமானது.
எல்லா துறையும் இணைந்து செயல்பட்டு உள்ளனர்.

மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக இருப்பதால் இன்னும் அதிக அளவில் பாதுகாப்பினை ஏற்படுத்திட வேண்டும். ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் டோக்கன் வழங்கக் கூடாது என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

மாடு டோக்கன் படி கொண்டு வந்தால் தான் சிறப்பாக இருக்கும். அப்போது தான் டோக்கனை கணக்கிட்டு அந்த நேரத்திற்கு வரலாம். சில இடங்களிலே இந்த சிஸ்டம் செயல்பட்டு வருகிறது. சில இடத்திலே ஒத்துழைப்பு இல்லை. நாம் ஜாதி பேதமின்றி, கட்சி பேதமின்றி இந்த விழாவில் நடத்துகிறோம். இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவிற்கு என்னை அழைத்தார்கள். , போக முடியவில்லை செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு ஆர்வலர் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் ஜல்லிக்கட்டை கடல் கடந்தும் தமிழருடைய பெருமை சாற்றி வருகிறார்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றால் அரசு வேலை வழங்கப்படும் என்பது கோரிக்கையாக உள்ளது என்ற கேள்விக்கு, ஜல்லிக்கட்டு விழா நடத்தக்கூடிய கமிட்டிக்கு அரசு துணை நிற்க வேண்டும், மாவட்ட நிர்வாகமும் துணை நிற்க வேண்டும். மாடு பிடி வீரர்களும் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பொழுது இது பாதுகாப்பான விளையாட்டாக மாறி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் சட்டதிட்ட நெறிமுறைகளை செயல்படுத்தி வருகிறோம் மிகுந்த மகிழ்ச்சி.

அடுத்த முறை இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் உங்கள் காலை பங்கேற்குமா என்ற கேள்விக்கு,அடுத்த முறை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு காளையை கப்பலில் அனுப்பி விடுகிறேன் என்று மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

1 hour ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

1 hour ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.