ரூ.25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் தயாரித்த ஆபிரகாம் தாஸ் என்பவர் ராமநாதபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை போத்தனுரை சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவர் குனியமுத்தூரில் உள்ள அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளையை திருச்சியை சேர்ந்த ஆபிரகாம் தாஸ் (வயது 59) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போத்தனூர் மேட்டூர் பகுதியில் அறக்கட்டளைக்கு சொந்தமான 4.36 ஏக்கர் இடத்தை சார்- பதிவாளரின் முத்திரை மற்றும் கையெழுத்தை போலியாக சித்தரித்து அந்த இடத்தை அருள் என்பதற்கு பவர் போட்டு கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆபிரகாம் தாஸ் மற்றும் அருள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆபிரகாம் தாசை போலீசார் கைது செய்தனர். மேலும் 4.36 சென்ட் இடம் தற்போதைய மதிப்பு 25 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.