Categories: தமிழகம்

10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது… பீதியில் மக்கள்

விருதுநகர் : விருதுநகரில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவமனை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போலி மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் வேலுச்சாமி நகரை சேர்ந்தவர் சுப்பல் மிர்தா (48). இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் வசித்து வருகிறார். சுப்பல்மிர்தா விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் செய்வதாக புகார் எழுந்தது.

இந்த புகாரில் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுப்பல் மிர்தா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் அளித்த புகாரில் பேரில் விருதுநகர் மேற்கு காவல்துறையினர் சுப்பல் மிர்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

18 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.