தமிழகம்

வழக்கை முடித்து வைப்பதாக கூறி ஜவுளி அதிபரை ஏமாற்றிய போலி பெண் சாமியார்… ரூ.10 லட்சம் அபேஸ்..!!

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு கடந்த 2023 ஆம் ஆண்டு செய்துள்ளதாகவும் இதனால் மனக்குழப்பத்தில் இருந்துள்ளார்.

அப்போது திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சியநாயக்கன்பட்டி பகுதியில் பின் சாமியாராக வலம் வரும் ராஜலட்சுமி என்பவரை பார்த்து தனக்கு தொடர்ந்து பிரச்சினைகள் இருப்பதாக கூறியதாகவும், அதில் அவர் சாமி பார்த்து உனது பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என கூறினார்.

பெண் சாமியார், தனக்குத் தெரிந்த வழக்கறிஞர் கணேசன் என்பவர் சின்னாளபட்டியில் உள்ளார். இவர் மதுரையில் வழக்கறிஞராக உள்ளார் என 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திண்டுக்கல் தனியார் விடுதியில் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் இதை அடுத்து வழக்கறிஞர் தான் மதுரையில் மிகப்பெரிய வழக்கறிஞராக இருப்பதாக கூறி ரூபாய் ஒரு லட்சம் வாங்கிக் கொண்டார்.

பின்னர் வழக்கை துரிதப்படுத்த சிலருக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து 5 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டார்.

அதேபோல் வழக்கை முடிப்பதற்கு நீதிபதிக்கு 10 லட்சம் கொடுக்க வேண்டும் ஒரு மாதத்தில் வழக்கு முடிந்து விடும் என்று கூறி 2 லட்சம் காசோலையாகவும் 3 லட்சம் பணமாகவும் என்னிடம் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு நான் தொடர்பு கொண்டாலும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதேபோல் நான் நேரில் சென்று கேட்ட பொழுது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி பணம் தர முடியாது எங்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதேபோல் வழக்கறிஞர் கணேசன், மதுரையில் அரசு வழக்கறிஞராக இல்லை போலியாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னிடம் வழக்கை முடித்து தருவதாக பத்து லட்ச ரூபாய் வாங்கி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வழக்கறிஞர் கணேசன் மீதும் போலி சாமியார் ராஜலட்சுமி மீதும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மோகனசுந்தரம் புகார் அளித்தார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.