கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து கொடுத்ததாக கூறி 6 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்து கரூர் நகர காவல் நிலைய போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதையும் படியுங்க: இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் அசத்தல் மார்க் : கண்ணீர் கோரிக்கை.. முதல்வர் உத்தரவு!
இன்று கரூர் நகர காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆதார் கார்ட் விண்ணப்பம், பான் கார்டு, லேப்டாப், செல்போன், அரசு மருத்துவரின் போலி முத்திரை உள்ளிட்டவைகளை செய்தியாளர்களிடம் காட்சிப்படுத்தி இந்த குற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் மீது போலியாக அரசு ஆவணங்கள் தயார் செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அதில் சம்ந்தப்பட்ட குற்றவாளிகளை எந்தெந்த இடங்களில் செயல்படும் ஜெராக்ஸ் கடைகளில் இது தயாரிக்கப்பட்டது என்பதனை காட்ட சொல்லி நகரின் மைய பகுதிகளான ராமகிருஷ்ணபுரம், வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடைகளுக்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சேகரிக்கும் பணியில் கரூர் நகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில், காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான சட்டம் ஒழுங்கு மற்றும் சைபர் கிரைம் போலீசார் இந்த தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இந்த சோதனையின் காரணமாக கரூர் நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.